Home »  Blog » Parents »  ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மனநிலையை பெற்றோர்கள் மேம்படுத்துவதற்கான 10 வழிகள்…

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மனநிலையை பெற்றோர்கள் மேம்படுத்துவதற்கான 10 வழிகள்…

ஓர் ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடிக்கும் ஊரடங்கால், நமது மனதில் ஏற்பட்டுள்ள ஏக்கம் அதிகரிக்கவே செய்துள்ளது. தொற்றுநோய் தொடங்குவற்கு முன்பான நமது வாழ்க்கையை நாம் நினைவுகூரும்போது, இந்த வார்த்தையே, நம் முன்னால் வந்து நிற்கிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது என்பது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், குழந்தைகள், தங்களை வீட்டிலேயே இணைத்துக் கொண்டு உள்ளனர். ஆன்லைன் வகுப்புகள், அவர்களை தற்காலிகமாக மட்டுமே ஆக்கிரமித்து கொண்டு உள்ளன. குழந்தைகளின் வேகமான மனங்கள், அதை பயன்படுத்த வழி இல்லாமல், விரிவான சக்தியை இருப்பிலேயே வைத்து உள்ளன. இதுபோன்ற நேரங்களில், பெற்றோர்கள் தங்களது தினசரி வேலைகளை செய்து குடும்பத்தை நிர்வகிப்பது மட்டுமல்லாது, குழந்தைகளையும் கவனிக்க வேண்டி உள்ளது.

குழந்தையை பொறுத்தவரை, தான் வைத்துள்ள பொம்மைகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாதது மிகவும் வெறுப்பையே உருவாக்கும். குழந்தைகள் மீதான பெரியவர்களின் விழிப்புணர்வு சற்று குறையும்போது, வீடுகளில் குழந்தைகளின் துக்ககரமான பெருமூச்சுகள் மற்றும் அதன் அழுகுரல் எதிரொலிக்கின்றன. கோடிக்கணக்கான பெற்றோர்கள், இதுபோன்ற நிலைமைக்கு சாட்சி ஆகவும் உள்ளனர். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், அதன் தன்மை மேலும் மோசமானதாக மாறுகிறது. பல பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் சரியான வழியை தெரியாமல் திண்டாடி வருகின்றனர். சூழ்நிலை நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது, குழந்தையை மட்டும் எப்படி ஊக்குவிப்பது என்று தெரியாமல் திண்டாடுகிறீர்களா? நீங்களே அதை வெறுமனே பார்க்க முடியும் போது, அவற்றை எப்படி வெளிப்புறத்தில் சுட்டிக் காட்டுகிறீர்கள்?

உங்களின் கடின உழைப்பை கண்டு வியக்கும் நாங்கள், உங்களது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உங்களை ஆதரிக்க விரும்புகிறோம். உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில வழிகள் இங்கே தரப்பட்டு உள்ளன.

Tamil-positive-environmentசாதகமான சூழல்: ஒரு வீடு, குழந்தைக்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தவும் மற்றும் செழித்து வளரவும் தேவையான புகலிடமாக அமைகிறது. அவர்கள் வீட்டில் இருக்கும்போது, பெரியவர்களுக்கு இடையேயான மோதல்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை, பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். நன்றி உணர்வின் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கும். குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, அவர்கள் நன்றியுடன் இருக்க வேண்டிய சிறிய விசயங்களை காட்டுங்கள்.

Tamil-Exercise
உடற்பயிற்சி:
குழந்தைகளை தினமும் சுறுசுறுப்பாக வைத்து இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை, பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகள் நிரூபித்து உள்ளன. வெளிப்புற விளையாட்டு நேரம் குறைந்து விட்டதால், உடற்பயிற்சி மற்றும் யோகாவை, குழந்தைகளின் வழக்கமான அட்டவணையில் இணைக்கப்பட வேண்டும்.

tamil-communication
தொடர்பு:
உங்கள் குழந்தை உடனான நட்புறவை ஏற்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்தவும். உங்கள் உடன் தொடர்பு கொள்ளவும், தங்களை அச்சம் இன்றி வெளிப்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் நிலைப்பாட்டை அறிவது மிகவும் முக்கியம் ஆகும்.

Tamil-Creativity

படைப்பாற்றல்: உங்கள் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, அவர்களை வேடிக்கையான செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம், அதை நாம் பெறலாம். இந்த நோக்கத்திற்காக, குழந்தைகளை கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த LEAD கோடைக்கால முகாம் முயற்சியை அறிமுகப்படுத்தியது. அவர்களுக்கு கலை மற்றும் கைவினைத்திறன், ஒன்று சேர்ந்து நடனம் ஆடுதல், புதிய மொழியை அல்லது இசைக்கருவியை கற்றுக்கொள்ளுதல்.

tamil-relaxation-method
தளர்வு முறைகள்:
குழந்தைகளை அதன் பிறந்த ஆண்டுகளில் இருந்தே அமைதியை ஊக்குவித்து வந்தால், அது இறுதியில் அவர்களுக்கு பயன் அளிக்கும். நீங்கள் அவர்களுக்கு தியானத்தின் சக்தி, ஆழ்ந்த சுவாசித்தலின் நுட்பங்கள் உள்ளிட்டவைகளை விளக்கலாம்.

tamil-patience

பொறுமை:
பெற்றோர்களே, குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் ஆவர். நீங்கள் அவர்களை சுற்றிச் செல்லும் விதம், அவர்களின் அணுகுமுறைகளில் பிரதிபலிக்கும். பொறுமையின் மதிப்பை குழந்தைகளுக்கு நீங்கள் போதிக்க, ஒவ்வொரு முறையும் குழந்தைகளினால் அல்லது வெளிப்புற காரணிகளால் கோபம் அடையும் போது, பெருமூச்சு விடுங்கள்

Tamil-unconditional_love
நிபந்தனை அற்ற அன்பு: நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்களின் குழந்தைகளின் மீது அளவு கடந்த அன்பை செலுத்துங்கள். ஒரு பெற்றோரைவிட குறைவாகவும், அவர்கள் நிபந்தனை இன்றி சாய்ந்துக் கொள்ளக்கூடிய கூட்டாளி ஆகவும் மாறுங்கள். ஒவ்வொரு தவறுகளில் இருந்தும், அவர்களின் கற்றலை அடையாளம் காண உதவுங்கள்.

tamil-external-help

வெளிப்புற உதவி:
நாம் நமது மன ஆரோக்கியத்தை மறுபரிசீலனை செய்வது முக்கியம் ஆகும். நமது சமுதாயத்தில் உள்ள தடை மற்றும் களங்கம், ஏற்கனவே உதவி தேவைப்படுகிற குழந்தைகளை அமைதிப்படுத்தி உள்ளது. உங்கள் குழந்தை உங்களிடம் இருந்து உதவி பெற மறுத்தால், தொழில்முறை வழிகாட்டுதலை பெற தயங்காதீர்கள்.

Tamil-support-system
ஆதார அமைப்பு : இந்த ஊரடங்கு காலத்தில், நாம் திரை பார்க்கும் நேரம் அதிகரித்து இருப்பதை மறுக்க இயலாது. உண்மையிலேயே குடும்பத்தில் ஒரு ஒற்றுமையை உருவாக்க சாதனங்களின் தலையீடு இல்லாமல், ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

Tamil-problem-sloving
சிக்கலை தீர்க்கும் திறன்கள்:
சாலைத்தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகும். கஷ்டங்களின் காரணமாக மட்டுமே, நாம் நல்ல நேரங்களை ஒப்புக்கொள்ள கற்றுக் கொள்கிறோம். சவால்களின் மூலம் நம்பிக்கையையும், நேர்மையான அணுகுமுறையை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தைகள் தடைகளை வெல்ல உதவும். குழந்தைகளை அவர்களின் வழியில் உள்ள தடைகளை தீர்க்க சிரமங்களை தீர்க்க முழு சுதந்திரம் அளியுங்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் ஏன் LEAD முறையில் இயங்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும்?

LEAD முறையில், உங்கள் குழந்தைகளுக்கு கல்விச் சுவர்களுக்கு அப்பால் கற்பிக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ட அம்சங்களுடன் ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையான வளர்ச்சி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். LEAD Summer CampLEAD Premier League, மற்றும் LEAD MasterClass போன்ற எங்கள் முயற்சிகள் கற்றல் இடைவெளியை குறைத்து குழந்தைகளை, வாழ்க்கைக்கு தயார்படுத்த முயல்கின்றன.

உங்கள் குழந்தைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்ய LEAD உதவுகிறது. உங்கள் குழந்தையை, LEAD முறையில் இயங்கும் Schoolலில் சேர்க்க: சேர்க்கை படிவத்தை இப்போதே நிரப்பவும்

About the author

Manasa is a Branding and Communication Manager at LEAD. She is an Asian College of Journalism alumnus and a former Teach for India Fellow. Manasa has also completed her MBA in marketing from Deakin University. She strongly believes that education has the power to shake the world and is excited to be a part of LEAD’s transformational journey.

Manasa Ramakrishnan

student management system

How student management system helps with online classes?

It is said that major world events often make a way for discoveries and innovations. This time, a pandemic altered how the education sector across the globe functioned for years. As schools shifted on

Read More

24/04/2023 
Manasa Ramakrishnan  |  Parents

online classes

Online classes & NEP together replace old learning methods

Why the Indian Education system needed a revamp We are right in the middle of a global crisis.

Read More

02/01/2023 
Manasa Ramakrishnan  |  School Owner

Smart classes simplify homeschooling during COVID-19

LEAD School is currently offering LEAD School@Home for all its partner schools parents. Children can now attend live classes daily, attempt quizzes, ask doubts, without any hassle.

To mitigate the

Read More

22/12/2022 
Manasa Ramakrishnan  |  School Owner

With eLearning’s advent, are kids ready for smart schools

This year, the delivery model of education that largely remained unchanged for centuries has suddenly been disrupted owing to the ongoing crisis and according to some experts, this could be a permanen

Read More

21/12/2022 
Manasa Ramakrishnan  |  School Owner

x

Give Your School The Lead Advantage

lead
x
Planning to reopen
your school?
Enquire Now
x

Give Your School The Lead Advantage

x

Download the EBook

x

Download the NEP
Ebook

x

Send us your queries

x

Give Your School The Lead Advantage